அன்பே சிவம்
அன்பே சிவம் புகை கக்கும் டீ பாய்லர்க்கு கீழே வெறும் தரையில் குப்பை பொறுக்கும் கிழிசல் டவுசர் வேலு அருகே அவன் ஆத்தா காமு இருவர் கையிலும் வாய் சுட, கை சுட மதிய உணவாய் கிளாசில் டீ சாதா ஸ்பெஷலென்ற வித்தியாசம் துணியாய் புரொட்டாவை சுழற்றும் சின்னையன் கடை டீயில் மட்டுமல்ல என்பது சாய்மான பெஞ்சில் டவரா செட்டில் டீ குடிக்கும் பூசாரி ராம துரையை அம்மன் சன்னிதியில் பார்த்தால் தெரியும் பெரிய குங்கும பொட்டும்,தோள்,மாரென.சந்தனம் மணக்க அரை கண் மூடி தட்டில் விழும் தட்சணையை கிழ் பார்வையால் கணக்கிடும் பூசாரிக்கு தெரியும் பொங்கல் பிரசாதம் தரனும் யாருக்கென்ற சாமி