இடுகைகள்

பிப்ரவரி 5, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் பிறந்தாய் மரமே...

படம்
இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..                                                  பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்                          சினிமா பெண் மாதிரி                          ஏன் ,நீ...                          சிதைந்து கிடக்கிறாய்                          என ஏளனித்த, எனை பார்த்து                          மரம் சொல்லியது                          "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை                         குறியீடாய் சொல்லத்த்தான்                         வீழ்ந்து கிட்க்கிறேன்                         விழித்துக்கொள் என் மகனே..!"

ராஜாவின் நகர் வலம்

LUNATIC                ஒரு முறை ராஜா நகர் சோதனைக்கு மாறு வேடத்தில் பரிவாரங்கள் இல்லாமல் தனியாளாய் பொடி நடையாய் போயிருந்தாராம்.அன்று அமாவாசை.கும்மிருட்டு. எதிரில் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம்.மோதியது சரியான முரட்டு பாடி என்பதால், ராஜா உடம்பெல்லாம் வலி கண்டு விட்டதாம். நகர் சோதனை முடித்து அரண்மனைக்கு கடுப்புடன் வந்த ராஜா ஒரு அவசர சட்டம் போட்டாராம். அதன் படி ராத்திரியில் வெளியே யார் நடமாடினாலும் ஒரு விளக்குடன் நடமாடுதல் வேண்டும்.                       போட்ட சட்டம் எந்த மட்டில் அமல் ஆகிறது,என்பதை தெரிந்து கொள்ள ராஜா மீண்டும் மறு நாள் நகர் வலம் வந்தாராம் அமாவசைக்கு மறுநாள்.ராஜா   மீண்டும் எதிர் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே   ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற   ராஜா போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கொண்டு வர வேண்டும்"எனறான்.                   பின் எங்கே விளக்கு-என்றார் ராஜா.பையில் இருக்கு என்றான் அவன். என்ன பையிலா என்ற ராஜாவின் அதிர்ச்சி வினவலுக்கு அவன் பதிலாக,"கையில்