மீண்டும் நாளைய இயக்குநர்கள்....
மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்-சீசன்-3 , புதிய விமர்சக தேர்வுக் குழுவுடன் 11-9-2011 அன்று ஒளிபரப்பாகியது. சமிப காலமாக குறும்படங்கள் வெகு ஜன வரவேற்பை பெற்றதோடல்லாமல், ஜன ரஞ்சக பிரபல வார மாதா இதழ்கள் மட்டுமின்றி பிரபல தொலைகட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.இது ஒரு நல்ல முன்னேற்றம்.குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதுமையாய் பரிட்ஷார்த்தமாய் தனி மனித எண்ணங்க்களை விஷுவலாய் பதிவு செய்யும் ஒரு களமாய் உள்ளது. .இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக படமக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆரோக்கிய சுழல் உருவாகி வருதலை காட்டுகிறது. குறிப்பாக-மதராச பட்டிணம், வம்சம், மைனா போன்ற படங்கள் தமிழில் வருமா என ஏங்கிய நாட்கள் போய்விட்டது. இந்த அசுர வேகத்தின் வெளிப்பாடே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிர...