மீண்டும் நாளைய இயக்குநர்கள்....


                                    மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்-சீசன்-3 ,  புதிய விமர்சக தேர்வுக் குழுவுடன் 11-9-2011 அன்று ஒளிபரப்பாகியது.
சமிப காலமாக குறும்படங்கள் வெகு ஜன வரவேற்பை பெற்றதோடல்லாமல், ஜன ரஞ்சக பிரபல வார மாதா இதழ்கள் மட்டுமின்றி பிரபல தொலைகட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.இது ஒரு நல்ல முன்னேற்றம்.குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதுமையாய் பரிட்ஷார்த்தமாய் தனி மனித எண்ணங்க்களை விஷுவலாய் பதிவு செய்யும் ஒரு களமாய் உள்ளது.

        .இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக படமக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆரோக்கிய சுழல் உருவாகி வருதலை காட்டுகிறது.
 குறிப்பாக-மதராச பட்டிணம், வம்சம், மைனா போன்ற படங்கள் தமிழில் வருமா என ஏங்கிய நாட்கள் போய்விட்டது.
                    இந்த அசுர வேகத்தின் வெளிப்பாடே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குறும்படங்கள்.குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகிய நாளைய இயக்குநர் இரண்டு சிசன்களூம், பாராட்டுதலுக்கு உரியது மதன் அவர்களுடன் பிரதாப் போத்தன் அவர்களும்வித,விதமான புதுமை சுற்றுகளூடன் துல்லிய விமர்சன கணிப்புகளுடன், இளம் இயக்குனர்களை கை பிடித்து புதிய உயரங்களுக்கு அழைத்து சென்றார்கள் மதன் அவர்களின் பன் முகம் உலகறிந்தது.அவரின் சினிமா ஞானம் விரிந்து பரந்தது.
                                          இவர்களை போலவே தான் புதிய ஜட்ஜஸ்-பாக்கிய ராஜ் அவர்களும் சுந்தர்-C அவர்களும்; இவர்கள் குறும்படங்களுக்கு அணி சேர்க்கும் கூட்டணிதான்.இது முதல் நாளில் இவர்கள் செய்த விமரிசனத்தில்யே தெரிகிறது.
11-9-11 அன்று ஒளிபரப்பகிய நான்கு குறும்படங்களும் பாரட்டுதலுக்கு உரியவை.
                         பிரசாந்த் இயக்கிய "நைஜிரியன் காதல்" படத்தின் அடித் தாளம் சாரி அடித்தளம் -- லோக்கல் பார்ட்டீயை நைஜிரியன் என்று எண்ணி ஏமாந்த ஜொள்ளுப் பாட்டி, சாரி பார்ட்டிதான்
                    எளிய கதை, சிரமம் இல்லாத தயாரிப்பு.கம்மி வசனம் தான் இதன் ஹை லைட்.
                             அடுத்தது நந்தாவின் படைப்பான உயிர்.இதன் நாயகன் "பைக்". அதீத கற்பனை.நடிகர் களின் அசால்டான நடிப்பு பிரமாதம்.உச்ச கட்டம் கதையின் மெஸ்ஸேஜ் கம் கருவை சொல்லப் போகிறோம் என்கிற பில்டப் கொ ஞ்சமும் இல்லாது இயல்பாய் நடித்த மெகானிக் அவர்கள்.
அடுத்தது--
     முதல் பரிசு பெற்ற நிகிலனின் 'புதிர்" நிஜத்தில் இது பஸில் டைப் தான்.
ஆரம்பித்த இடதிலேயே முடியும் இந்த படம் சுஜாதா அவர்கள் குமுதம் வார இதழில் முதன் முதலாய் எழுதிய "இது கதையின் ஆரம்பம் அல்ல.." என்ற சிறுகதையை நினைவு படுத்தும் விதத்தில் புதிய முயற்சியாய் இருந்தது. கதை சொன்னதில் கிளாரிட்டி கொஞ்சம் குறைவு.விஷ்வல் அம்சம் இல்லை. இது ஒரு நல்ல ரேடியோ நாடகம். அதாவது, கேட்டாலே கதை புரிந்துவிடும். கதைக்கு அடி நாதமே செல் ஃபோன் உரையாடல் தான்.பாரட்டத்தக்க புதிய முயற்சி.
அடுத்தது சீனிவாசன் இயக்கிய "செல்வி".குழப்பம் இல்லாது கதையை நேரிடையாய் சொன்ன படம்.நடிக நடிகையரின் இயல்பான நடிப்பு அளவான வசனம் படத்தில் + பாயிண்ட். இயக்குனரை நிறைய இடத்தில் பாராட்டலாம்.நாயகன், செல்வி சந்திப்பு முதன் முதலாய் நிகழும் சமயம் காட்சி சிகப்பு கலரில் உள்ளது.ரெய்டு நடக்க போவதை படிப்படியாய் உணரசெய்வது.பரிசளித்த திருக்குறள் ஜீப்பில் இருந்து விழுவது.இந்த குறுபடத்தை பார்க்கும் போது,கமலின் நாயகன் பட நினைவு ஏனோ வருகிறது.உயர் தேர்வுக்கு தயாராகும் நாயகனுக்கு பழைய சிக் மெண்ட் ஃப்ராய்ட் மற்றும் ÍQ பற்றி பாடம் எடுப்பது லாஜிக்கான விஷயம் இல்லை.

இப்படி முடித்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது...??
படம் முழுவதும் செல்வியின் முகம் காட்டப்படவில்லை.குரல் தான்அடையாளம் .செல்வியின் நல்ல teaching- ஐ பாரட்டும் விததில் கதாநாயகன் அவளுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைபரிசளிக்கிறான்., செல்வியின் வற்புறுத்தல் காரணமாக அதன் முன் பக்கத்தில் எதோ எழுதி, பரிசளிக்கிறான்.ரெய்டு நடக்கிறது. மகளீர் போலிசார் வரிசையாய் பெண்களை போலிஸ் வானில் ஏற்றுகிறார்கள்.அதில் இறுதியாய் ஒருத்தி எறுகிறாள். அவள் கை நழுவி ஒரு புத்தகம் கீழ் விழுகிறது.
அந்த புத்தகம் க்ளோசப்பில் காட்டப்படுகிறது. அது திருக்குறள் அதன் அட்டை மீது- "உடுக்கை இழந்தவன் கை போல.." என்று எழுதப்பட்டது ஃபோகஸ் செய்யப்படுவதுடன் படம் முடிகிறது.
உடுக்கை என்றால் உடை பெண்ணின் மானம் காக்கும் உடை.அதை போல் உதவ முடியா நாயக நண்பன்.
இது எப்படி இருக்கு..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

பரத நாட்டியத்தை பற்றி ...