மங்காத்தா என்ற ஆட்டம்..
திரிஷா,ஆண்ட்ரியா,அஞ்சலி.லட்சுமி ராய் மற்றும் மங்காத்தா இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாகமாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக தயரிக்கப்பட்டுள்ளது இது மாறி வரும் மக்கள் மன நிலையை காட்டுகிறது. மதராச பட்டிணம், வம்சம், மைனா,தெய்வத் திருமகள், அங்காடித் தெரு,அழகர் சாமியின் குதிரை,தென் மேற்கு பருவ காற்று, போன்ற படங்கள் தமிழனின் ரசனை வளர்ச்சிக்கான அறிவிப்பு.சினிமாவிற்க்கு இந்த கதை, இந்த களன் உரியதா ரசிக்கப்படுமா? என்ற தயக்கங்கள் இன்று இல்லை. எளிய சிறுகதை வடிவத்தில், மனித எண்ணங்களின் பதிவாய் சில படங்கள் வந்துள்ளது..தினமும் சந்திக்கும் அல்லது பார்த்த மனிதர்களின் பார்த்தறியா உலகம்.புதிரான தனி மனித அவலங்களும்ஆசைகளும், கனவுகளும்,கற்பனை செய்திராத வேறு உலகங்களும் செல்லுலாய்டில் சித்திரமாகின்றன..புதிய படைபாளிகளின் வித்யாசமான சிந்தனைகள்.தொழில் நுட்பம்,காமிரா கையாள்கையில்,நெறியாள்கையில் வித்யாசம்.கதை சொல