இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...

ஆரம்ப நாட்களில் நான் சிவாஜி ரசிகன்.எம்.ஜி.ஆர்.ரசிகர்களுடன் பள்ளி நாட்களில் சூடான விவாதம் செய்வதுண்டு.எனது வகுப்பு தோழர்கள் இந்த வாக்கு வாதத்தை கைகலப்பு வரை கொண்டு செல்வார்கள்.இந்த ரசிகர் பிரியர்  வாக்குவாதம் குறுகி பிடி சண்டைகள் காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் வருடக்க கணக்கில் பேசாமல் இருந்ததுண்டு.    நண்பிகளுடன் தான் பார்த்த ஒரு திரைப்படத்தை என் சகோதரி ஓஹோ என்று பாராட்டியதால் நான் முதன் முதலாக சிவாஜி நடிக்காத அந்த படத்தை பார்க்க சென்றேன். அந்த திரைப்படம் தான் பாமா விஜயம். அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் கவர்ச்சியே நாகேஷும், KB அவர்களின் சாதுர்யமான வசனங்களும். தான்.பெற்ற தாய் அடிக்கடி காட்டும் நாடக பாணி பாசம்,உடன் பிறந்த சகோதரன் தன் கள்ள காதலியுடன் செய்யும் மோசம்,கழுத்தில் புலிநகம் அல்லது கர்சிப் அணிந்து முரட்டு மீசை கெட்டவர்கள் செய்யும் நாசம் போன்றவை இல்லாதா அவரின் திரை படங்களால் நானும் என் வகுப்பு தோழர்களும் ஈர்க்கப்பட்டு அவரின் விசிறிகள் ஆகிவிட்டோம். புத்திசாலிதனமான நகைசுவை வசனங்கள், யதார்த்தமான காட்சிகள், வித்யாசமான பாத்திரங்கள்,ஏற்று நடிக்குக்கும் இளைஞர் பட்டாள