கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,

கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,சுந்தர்.சியின் ஆக்கப் பூர்வ கமெண்ட், வித்யாசமான படைப்புக்கள் என்று 18-9-11 ல் ஒளிபரப்பான நாளைய இயக்குனரின் இந்த இரண்டாவது நிகழ்வு ஜனரஞ்சகமாயும், சுவாரஸ்யமாயும் இருந்தது ஸ்டீபனின் 1,4,3- ஒரு நிறைவுறா காதல் கதை..படத்தின் சிறப்பு சுருக்கமான script-ம்,அளவான வசனமும்தான்.டீச்சர்,வாத்தியாரின் நடிப்பு இயற்கையாய் சன்னமான தாளலயத்தில் சொல்லப்பட்டிருந்ததை நையாண்டி செய்வது மாதிரி இரைச்சலான பிண்னணி இசை.வாத்தியார் பேசியதே நாலு dialogue.அதில் இரண்டு முக்கியம் வாய்ந்தது,ஒன்று " நான் வேணும்னா parents ஐ அணுப்பி வைகட்டுமா," மற்றது டோக்கன் நம்பர்:1,4,3 என்றதும், "அது என்னைத்தான்".என்பதும். இவை இரண்டும் பிண்னணி இசை சத்தத்தில் காதில் விழாமல் படத்தை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. தன் குறும்படத்தின் பெயரை பாரதி பாலா ஆரம்பத்தில் சொல்லவில்லை. படம் ஆரம்பித்ததும் புரிந்துவிடுகிறது.அவள் அழகி என்று.அது தான் அவள் பெயரும் என்று உணரும் போது நெஞ்சு கனக்கிறது.படத்தின் தலைப்பும் அதுதான் என முடிவில் தெரியும் போது நெருடல். பெண் கள் ஏமாற்றப்பட்டு இப்படி வஞ்சிக்க படுதல் தினமும் இந்த நாட்டின் ஏதாவது ஒருபகுதியில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளதுகாதல் பெயரால் பாலியல் வ ஞ் சிப்புகள் இங்கு நிறையவே.கதை சொல்லிய விதம் வழக்கமான ஒன்று என்றாலும், இயக்குனர் கூத்துப் பட்டறையில் பாடம் பயின்ற touch கள் தெரிகிறது. சஞ்சயின் சத்தியம் வார இதழ்களில் வரும் ஒரு பக்க கதை மாதிரி 'நினைதது ஒன்னு நடந்தது ஒன்னு' வகையை சார்ந்தது எனினும் ரசிக்கலாம்.ஆரம்ப build up களில் கதை எப்படி நகரும் என்பது மட்டுமல்லாமல் எப்படி முடியும் என்பது ,கைதிகளை கை விலங்குடன் மறைவான ஒதுக்கு புறத்தில் காவல் துறை நுழையும் போதேதெரிந்து விடுகிறது. வசனத்தில் வேறு மாநில தமிழ் மாதிரியான மண் வாசனை இல்லை.சிக்கனம் மற்றும் artist கள் இன்மை காரணமாய் நடந்த ஒன்று judge களின் இசைவால் வட்டார வழக்காய் ஏற்கப் பட்டது தான் சோகம்.(ஹைதிராபாத் வ.வழக்கு கதை post script-ல் பார்க்க) ராமானுஜத்தின் "மீண்டும் ஒரு குழந்தை" வித்யாசமான களம்.மூப்பு ,வயோதிகம் இந்திய மண்ணில் சாபம்.கூட்டுக் குடும்ப நசிவுகளின் பின் விளைவும்,.பொருளாதார சமத்துவம் கிடைக்காத பழைய பெண் தலைமுறைகளின் அவலமும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.நடை முறைக்கு ஒவ்வா dramatic முடிவால் முதலிடம் மறுக்கப்பட்டிருக்குமோ..?
p- script: " Sabko maloom hai main sharabi nahin" அன்று யாதகிரி மிகவும் பரிஷான்லே இருந்தான்.ஹாமால் பஸ்தியில் தான் அவனுக்கு வீடு.அவன் அய்யா முன் காலத்லே குட்ஷெட்டில் மால் காடி வந்து நின்னா வரும் மூட்டை களை இறக்கிப் போடற வேலை.அதானலே ஹமால் பஸ்திலே ஜாகை பார்த்து குடி இருந்தார்.காலையில் பால் வாங்க போன யாதகிரியை வழியிலே பார்த்து ரெஹமான் பாய் அவனை மாலை நடக்க விருக்கும் தாவத்க்கு கூப்பிட்டிருந்தான்;அப்ப இருந்து யாதகிரிக்கு பரிஷான் தான் டுபாய் போக இன்னும் ஒரு வாரத்திலே விசா வந்திடும்மாம்.10,000 திரஹாம் வரை சம்பளம் வருமாம்.அதான் தாவத்.சாயங்கால பார்ட்டீன்னா எப்படியும் தண்ணியோட 'கீன்ஞ் காட்' தான்.வேனாம்ன்னு சொல்லமுடியாது.பக்கத்து கல்லியில் தான் ரெஹமான் வீடு.குடித்து விட்டு வீட்டுக்குப் போனால் மனைவி மல்லம்மா அவனை துக்குடா துக்குடா பண்ணிடுவாள். தாரமா, தண்ணியா இது தான் யாதகிரியின் பரிஷானுக்கு காரணம். மாலை அரை மனத்துடன் முதல் நாள் ஸ்கூல் போகும் குழந்தை மாதிரி தயங்கி,தயங்கி யாதகிரி ரெஹமான் வீட்டிற்குள் நுழைந்தான்.உள்ளே சாய், சசி,காஜா, ஜேம்ஸ், பட்னாகர் என்று எல்லோரும்நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.அவர்கள் முன் நின்று கொண்டிருந்த ரெஹமான்," இன்று சனிகிழமை நீங்கள் மட்டன் தின்ன மாட்டீங்கன்னு இன்னைக்கு வெறும் veg party witrh cool drinks என்றதும் யாதகிரி நிம்மதி பெருமுச்சு விட்டான். பார்ட்டீ ஆரம்பத்து விட்டது பங்கஜு தாஸ் பாடலுடன். " Sabko maloom hai main sharabi nahin "

கருத்துகள்

தேரோட்டி இவ்வாறு கூறியுள்ளார்…
post script-ல் வந்த்ள்ள கதை சரியாக புரியவில்லை. காரணம் too many Greek and latin words. தலைப்பின் விவரத்தையும் தந்தால் ரசிக்க இயலும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

பரத நாட்டியத்தை பற்றி ...