முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை முரண் இதில் மட்டுமல்ல இன்னும் நிறையவே உண்டு. இரண்டு மாறுபட்ட முகங்களின், எதிர்பாராத சந்திப்பு; எதேச்சயாய் நிகழ்ந்த அது அந்த இருவரின் வாழ்கையிலும் அவர்கள் விரும்பாத பெரும் மாற்றத்தை குருரமாய் ஏற்படுத்திவிடுவதுடன், சீர் செய்ய இயலா இழப்பில் அவர்களை ஆழ்த்தி விட்டு நகர்ந்துவிடுகிறது. இது முரண் படத்தின் மைய புள்ளியாய் சொல்லலாம். இந்த கிருஷ்ணனுக்கு (நந்தா-கிருஷ்ணனின் வேறு நாமம்) (தே)காரோட்டியபடி அர்ஜுன் செய்யும் உபதேசமும் அதன் பின் விளைவும் முரண் கதையாய் விரிந்திருக்கிறது. contradiction களின்Conflict . ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் strangers on the train படத்தை நினவுருத்துகிறது கதையும், plot ம். ராஜன் மாதவ் இயக்கத்தில் சுமா பட்டாச்சாரியா,ஹரி பிரியா.நிக்கிதா,மெட்டி ஒலி நிலிமா, இவர்களுடன் சேரன், ப்ரசன்னா,ஜெய பிரகாஷ், போத்தன் நடித்த இந்த படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளது.. இரண்டு முரண் பட்ட பாத்திரங்கள் ஒரு விபத்தின் காரணத்தால்ஒரே ஊர்தியில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.இந்த எதிர்பாரா விபத்தால் நிறைய விபத்துக்கள் எதிர் பார்த்து நிகழ்த்தப் படுகிறது.பலி மூன்று உயிர்கள் முதலில் விளையாட்டுப் பிள்ளையாய் அர்ஜுன் அறிமுகமாகிறார்.மாடியிலிருந்து நீச்சல் குளத்தில் குதிக்கும்,நடு ரோட்டில் எதிர் திசைகளில் விரையும் இரண்டு பஸ்கள் மத்தியில் புத்திசாலிதனத்தை அதிஷ்டத்தில் இருந்து வேறு படுத்திப் பார்க்கும் ஒரு சைக்கோ பாத்திரமாய் தோன்றி பின் மாங்காய் திருடும் சின்ன சின்ன தப்புகள் செய்யும் Adventerous Hero மாதிரி மாறி பின், நட்புக்காக அடிதடியில் இறங்கும் முரட்டு நண்பனாய் Image Building செய்து கொண்டு,பின்னர் அவர் சிலந்தியாய் வலையை பிண்ணுவதை பார்க்கையில் அச்சமாய் இருக்கிகிறது.அர்ஜுன் கோர முகம் மெல்ல மெல்ல வெளிப்படும் போது தான் அவன் ஒரு perverted Pshyco என்பது நமக்கு நிதர்சனமாகிறது.wild Cat in Tracksuit.அனாலும் இறுதியில் தான் தெரிகிறது அது Cat அல்ல ரத்த வெறி கொண்டTiger என்று.கருணை வடிவான தன் தந்தையை காமுகனாய் Paint செய்ய வல்லவர். .ப்ரசன்னா ரொம்பவும் கஷுவலாய் வந்து.பாத்திரப்படைப்புக்கு புது மெருகேற்றி உள்ளார்.கதையை அடுத்த கட்டத்துக்கு தன் இஷ்ட்டப்படி நகர்த்த இவர் விரும்பிகிறார். விரும்பியது அல்லாமல் செய்யவும் செய்து காட்டுகிறார்.மூர்க்கமாய் இல்லாமல்,.mental and physical exerssion இல்லாமல் முக்கனாங்க் கயிற்றை பற்றி செல்வது மாதிரி அசால்டாய் காய்களை நகர்த்தி தான் விரும்பியதை செய்து முடிக்கிறார்.அல்லது செய்விக்கிறார்.இந்த சீனில் சண்டை வரும் சார் என்பதும், இதை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் தனக்குத் தெரியும் என்று அர்ஜுன் சொல்வதன் மூலம், தன் வாழ்க்கை கதையை தீர்மானிப்பது அல்லது எழுதுவது தான் தானென்று உறுதியாய் இருப்பதுதெரிகிறது; அது தான் இந்த பாத்திர படைப்பின் தனித்துவம்.ப்ரசன்னா நடிப்பு வார்த்தைக்குள் சிக்கா சூப்பர் காவியம். Law abiding middle class பாத்திரம் சேரனுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை அநீதிகளை கண்டிக்கும் ஜனநாயகவாதி.விளம்பரங்கள் தரும் Promise களை நம்பும் மத்திய வர்க்கம். sales girls மீது அணுதாபிக்கும் அப்பாவி.risk எடுத்து அதிஷ்டத்தை சோதிக்க விரும்பா அசடு அல்லது முட்டாள்..தன்னை அறியாமல் இவர் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்கிறார்.Lift கேட்ட கிருஷ்னனுக்கு காத்திருப்பது கீதை மட்டுமல்ல pistol with plan.இவருக்கு அனிச்சையாய் சம்பவித்த லாவண்யா காதலும் முதல் மனைவிக்கு நிகழ்ந்த மாதிரியான ஒரு விபத்தே.இவை முற்றிலும் நந்தா விரும்பி ஏற்படுத்தி கொண்டதல்ல.மத்திமர் வார்த்தையில் சொல்வதானால்- இது கடவுள் சித்தம்.நந்தா அவர் இச்சையை மிறி சிலந்தியால் இழுத்துச் செல்லப் படுகிறார்.கற்பனையில் கூட ஒரு உயிர்க்கும் சேதம் இழைக்க விரும்பாத மென்மையான இவரை ஒரு கொலை செய்ய mentaly prepare ஆக்குகிறான் அர்ஜுன். சேரனின் அமைதியான நடிப்பு Excelent.His acting justified the climax.இறுதி கட்டத்தில் சினிமாக்கள் இப்படித்தான் முடியும் என்கிற எண்ணம் தோன்றாமைக்குக் காரணம் சேரனின் நடிப்புத்தான். இந்த முரண்பட்ட இருவர்களின் வாழ்க்கை போர்தான் படம். இயக்குனரின் கை வண்ணம் படம் முழுக்கத் தெரிகிறது. அனைத்து பாத்திரங்களின் inner persanality ஐ அழுத்தமாய் மட்டுமின்றி ஆழமாயும் காட்டி உள்ளார்.நந்தா-அர்ஜுன் மட்டுமல்லாமல்,ஏனைய Characters emotional journey and its susequential consequences கள் அற்புதமாய் காட்டப்பட்டுள்ளது. இந்து -தந்தையை பழி வாங்க கள்ளக் காதலை உருவாக்கிக் கொண்டவள் லிண்டா-தாயின் அழிந்து போன கனவை மெய்பிக்கும் வெறியில் வெந்து போனவள் லாவண்யா -self pittying, அண்ட நிழல் தேடும் ஆத்மா. தேவராஜன் -இவரின் உலகம் அன்பாலும் கருணையாலும் ஆனது. மகனுக்கு உதவா ஆலமரமாய் தான் இருப்பதை சட்டை செய்தவரில்லை. character அறிமுக காட்சிகள் -அவர்களின் உள் முகங்களை வலிமையாய் Potrait செய்யும் விதத்தில் உள்ளது. இயக்குனர் Note this point என எதையும் அடிக் கோடிட்டுக் காட்டாமல் கதை சொல்லிக் கொண்டு போவது பார்வையாளனுக்கு புது அணுபவம். அவசியம் இல்லாத காட்சிகள் இந்த படத்தில் எதுவும் இல்லை.எல்லாம் Co-related. மிக வலிமையான திரை கதை.Example for Script Writing. சாமர்த்தியமான Editing படத்துக்கு சுவாசமாய் உள்ளது. ரசிக்கும் விதத்தில் சாஜன் மாதவ்-ன் இசை.அழகியலை படம் பிடித்த மாதிரி காமிரா வண்னத்துப் பூச்சியாய் துள்ளுகிறது.பத்மேஷ் சினிமோட்டோகிராப். கொலை செய்யும்துணிச்சல் இல்லாத நந்தா. துப்பாக்கியை தூக்கி எறிய கடற்கரைக்கு போகிறான்.அங்கே இரண்டு மன நிலை."என்னால் கொலை செய்ய முடியாது " என்று சொல்ல,நந்தா போனில் அர்ஜுனை அழைக்கிறார்.விஷயத்தை கேட்ட அர்ஜுன் நந்தாவிடம் "நீங்கள் எங்கே இருக்கிரிர்கள்" என் கேட்கிறான். நந்தா பதிலுக்கு,"நீங்கள் எங்கே இருக்கிரிர்கள்" என் கேட்கிறான். அடுத்த காட்சியில் நந்தா ஒரு மாலுக்குள் நுழைவதை முதல் தளத்தில் இருந்தபடி, அர்ஜுன் பார்க்கிறான்.அடுத்த காட்சி. எஸ்கலேட்டரில் நந்தா Frame-க்கு அடியில் இருந்து மேல் வருகிறான். இப்படி பல காட்சிகள். இயக்குநர் யார் சொல் பேச்சும் கேட்காதவர் மாதிரி தெரிகிறது. சேரன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.குடைக்குள் மழை மாதிரி ஒரு நல்ல படம் தயாரித்ததற்கு மட்டுமின்றி, இயக்குநருக்கு இவ்வளவு சுதந்திரம் தந்ததற்க்கும் தான்..! படத்தின் message என்ன என்றால்-- விபத்துக்கள் இயற்கை சம்பவம் என்று நம்புகிறவன் முட்டாள் அதை சம்பவித்து ஆதாயம் பெருபவன் அறிவாளி - இது அர்ஜுன் சொல்லும் சித்தாந்தம்.அனால் இதன் முலம் நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அந்நியனிடம் அகத்தை திறக்காதே-ஏனென்றால் .பாம்புகள் புற்றில் மட்டுமல்ல காரிலும் வாழும்..!

கருத்துகள்

ரைட்டர் நட்சத்திரா இவ்வாறு கூறியுள்ளார்…
உவமையோடு உங்கள் விமர்சனம் வித்தியாசமாக இருக்கின்றது. பகிர்வுக்கு நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

பரத நாட்டியத்தை பற்றி ...