கற்பனை வளம் இல்லாத படைப்புகள்


கற்பனை வளம் இல்லாத படைப்புகள்
 சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்)

ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழைய தலை முறை கைகாட்டுகாரர்களின் கற்பனை என சொல்ல வந்தாலும், MESSAGE சொல்லீயாக வேறு காட்டப்பட்டுள்ளார்.நாடக பாணியில் உள்ள சொல்லாடல்.கடவுள் எல்லோரயும் தீர்காயுசுடன் படைக்கிறார். மனிதன் தான் தன் தவறால் இறந்து விடுகிறான்.
இதை இப்படி சொல்லி இருந்தால்--
கடவுள் எழுதும் கதைக்கு மனிதன் தான்  முடிவு எடுத்து Climax- அய் எழுதுகிறான்.தலைபா கட்டுக்குப் பதிலாக அகோரி மாதிரியான சாமியாட்டம் வைத்திருக்கலாம்.

இளங்கோவனின் பேயவது பிசாசாவது, neither a thriller nor a comedy.பேய்க்கு கற்பனை வளம் இல்லை ஒரே மாதிரித்தான் சிந்திக்கும் என்பதை விளக்கியே தீருனேன் என்று இயக்குனர் கங்கணம் கட்டி கொண்ட மாதிரி பேய்களை சித்தரித்து இருப்பது ,புரிதல் காரணத்தாலா இல்லை பயங்காட்டும்  நோக்கிலா என்று விளங்கவில்லை.இறுதியில் இரண்டு பேய்களும் சிக்கனத்தை கருத்தில் கொண்டு old costume ல் வந்து இது காமெடிகதை horror movie இல்லை என்று சொல்வது மிகவும் ரசிக்கும்படி இருந்தது..போட்டோகிராபி யால் பார்வையாளன் அலுப்பில் இருந்து காக்க படுகிறான்.
இடைவெளி என்ற முருக ப்ரகாஷின் குறும்படம் நடுவர்களின் பாஷ்யத்தால் அதாவது விரிவுரையால் விளங்கியது.அதாவது முதல் காட்சியில் வரும் ஆண் பாத்திரமும் பின்னர் காரோட்டி வந்து, கதை சொல்லும் நீதி இதுதான் என்று நீள வசனம் பேசுவதும் ஒருவர் தான் என்பது. முதல் காட்சியில் வரும் ஆண் பாத்திரம் கலங்காலாகி காரோட்டியாவது கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடை இயக்குனரால் போடப்பட்ட பாலம்.இந்த இடை வெளியைத்தான் கதை title ஆக்கி இருப்பாரோ.
படித்தவன் எல்லாம் ஜெயிப்பதில்லை.out standing knowledge உள்ளவனுக்குத் தான் இன்றைக்கு market.இது கதையின் செய்தியாய் இருந்திருக்கலாம். கிழ் தட்டு கதாநாயகர்களின் பரிதபா நிலை கண்டு இரங்கும் கதாநாயகிகள் வியாபார நோக்கில் எடுக்கப்படும் திரைபடங்களின் அஸ்திவாரங்கள்.
அப்பா படம் சரவணாவின் படைப்பு. இது போன்ற தீம் நிறைய பேர் நிறைய ஃப்பார்முலாக்கள் வழியாக தங்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
மாடு கத்துகிறது-கார் நுழைகிறது-குறுந்தாடி இளை ஞன் காரில்- பிரமாதமாய் ஆரம்பித்து புஸ்வானமாகிவிடுகிறது.இது அப்பா point of view விலும் இல்லை அம்மா,point of view
விலும் இல்லை; மகன் point of view  விலும் இல்லை.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இதன் பதில் குடும்பத்தோடு குடும்பமாய் இரு.இது மாதிரியான நிலை 15,20 வருடங்களுக்கு முன் தூபாய் போன்வர்களுக்கு பொறுந்தும்.இன்றைக்கு குடும்பத்தில் உள்ள  அனைவரையும் மகன்கள் அழைத்துக் கொள்கிறார்கள் குறிப்பாய் பேறு காலங்களில்
 ஆனலும் இந்த இளம் இயக்குனர்களின் திறன் கண்டிப்பாய் எதிர் காலங்களில் மிளிறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...